Thursday, July 20, 2006

வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது கேவலமான செயல் இல்லையா?

1. எய்ம்ஸ் மருத்துவ வளாகத்திற்குள் போராட்டம் நடத்த தடை இருந்தும், அதை அனுமதித்தது எந்த விதத்தில் நியாயம்.

2. அரசு கட்டிடத்தையும், மின்சாரத்தையும் ஒரு பிரிவு மக்களுக்கு எதிரான போராட்டத்துக்கு அனுமதித்தது எப்படி.

3.நடவடிக்கை இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை என்றுதானே பொருள். வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் கொடுக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

4. சம்பளமில்லா விடுப்பில் சென்றவருக்கு சம்பளம் பிடித்தம் செய்வதும் ஒழுங்கு நடவடிக்கையாகுமா?

5. நடவடிக்கை எடுக்க சொல்லி அரசை வற்புறுத்துவதுதானே, நீதிமன்றங்களின் கடமை. நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று அரசிடம் உறுதிமொழி வாங்குவது, அல்லது அரசு இவ்வாறு உறுதிமொழி கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்.

5. இட ஒதுக்கீடு பிரச்சினை அல்லாமல், வேறு பிரச்சினைக்கான போராட்டங்களுக்கும், அரசிடமிருந்து இது போன்ற உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்படுமா?

6. வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் நடத்தினால், போராட்ட காலத்திற்கு, தினப்படி கோரலாமா?

7. முடியாது என்றால், பணக்கார, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு வேறு நீதியா?

8. வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது பிச்சை எடுப்பதிலும் கேவலமான செயல் இல்லையா?

9. இந்த பாமரனின் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

10. இவையெல்லாம், இல்லை என்ற ஒன்று இன்னும் இருக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது.

11. சமத்துவம் மலர இட ஒதுக்கீடு மிக மிக அவசியம் என்பதை, இத்தகைய நிகழ்வுகள் உணர்த்தவில்லையா?

0 Comments:

Post a Comment

<< Home

StatCounter - Free Web Tracker and Counter